search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா பொட்டலங்கள்  விற்றவர் கைது
    X

    கஞ்சா பொட்டலங்கள் விற்றவர் கைது

    • பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.
    • கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி தவிட்டுமேடு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் கஞ்சா விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.

    அப்போது மணிகண்டன் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் மணிகண்டனிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×