என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி சாவு
- அதிகமாக குடித்துவிட்டு வீட்டு முன்பு வந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(வயது54) .இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள சூரக்கல்மேடு பகுதியில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு குடிப்பழக்கம் அதிக அளவில் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று 20-ம் தேதி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டு முன்பு வந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது உறவினர் சென்னம்மாள் கொடுத்த புகார் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






