என் மலர்
உள்ளூர் செய்திகள்

வயிற்று வலியால் தற்கொலை செய்த கூலி தொழிலாளி
- மது அருந்தி விட்டு வீட்டிற்க்கு வந்தவருக்கு மீண்டும் வயிற்று வலி அதிகமானது.
- கோவிந்தராஜ் வீட்டின் உள்ளே சென்று தூக்கு போட்டு உயிருக்கு போராடி னார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பூனாத்தனஅள்ளி காலணியை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தராஜ் (வயது 35) . இவருக்கு நீண்ட நாட்களாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த 28-ம் தேதி இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்க்கு வந்தவருக்கு மீண்டும் வயிற்று வலி அதிகமானது.இதனால் விரக்தியடைந்த கோவிந்தராஜ் வீட்டின் உள்ளே சென்று தூக்கு போட்டு உயிருக்கு போராடி னார்.
இதனை கண்ட இவரது மனைவி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோவிந்தராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






