என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே பரிதாபம்: 6 வயது மகனை கொன்று கணவன்-மனைவி தற்கொலை
    X

    திருவள்ளூர் அருகே பரிதாபம்: 6 வயது மகனை கொன்று கணவன்-மனைவி தற்கொலை

    • மகன் ஹேமந்த்குமாருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கலையரசனும், நித்யாவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
    • கலையரசனுக்கு கடன் கொடுத்தவர்கள் யாரேனும் நெருக்கடி கொடுத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    திருவள்ளூர்:

    வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன் (வயது 34). விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சமையல் ஆர்டர் எடுத்து செய்து வந்தார். இவரது மனைவி நித்யா (30). இவர்களது மகன் ஹேமந்த்குமார் (வயது 6).

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமந்த்குமார் குடும்பத்துடன் திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு, வாசனாம்பட்டு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கேயே அனைவரும் தங்கி இருந்தனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு விட்டு அவர்களது அறையில் தூங்கினர். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கலையரசன் குடும்பத்தினர் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த மாமனார் அறைக்கு சென்று பார்த்த போது கலையரசனும், நித்யாவும் தூக்கில் பிணமாக கிடந்தனர். அருகில் உள்ள படுக்கையில் பேரன் ஹேமந்த்குமார் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மகன் ஹேமந்த்குமாருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கலையரசனும், நித்யாவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து மப்பேடு போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்துபோன 3 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கலையரசன் குடும்பத்துடன் தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேட்டரிங் தொழில் சரியாக இல்லாததால் குடும்பம் நடத்த கலையரசன் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன்பிறகு அவர் மாமனார் வீட்டுக்கு வந்து உள்ளார். அங்கும் அவர் மிகவும் மனவேதனையுடன் இருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

    இந்நிலையில் கலையரசனும், நித்யாவும் தங்களது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவர்களும் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளனர்.

    கலையரசனுக்கு கடன் கொடுத்தவர்கள் யாரேனும் நெருக்கடி கொடுத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    மகனை கொன்று பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×