என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரிய மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்
    X

    பெரிய மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்

    • ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலை யிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலை யிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்க ப்பட்டது. ஈரோடு கருங்க ல்பாளையம் சோளீ ஸ்வரர்கோவில் வில்வே ஸ்வரர், புஷ்பநாயகி அம்ம னுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதேபோல், சின்ன மாரி யம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி 4-ம் வெள்ளியை யொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.

    பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் சத்திய மங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலிலும் இன்று ஆடி வெள்ளியை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானியில் கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் கோபியில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. நூற்று க்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று அம்மனை வழிபட்டனர்.

    இதேபோல் சாரதா மாரியம்மன் கோவில் அந்தியூரில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் என மாவட்டம் முழுவதும் அம்மன் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    Next Story
    ×