search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் முன்விரோதத்தில் வாலிபர்களை அரிவாளால் வெட்டிய கும்பல்
    X

    கோப்பு படம்.

    பழனியில் முன்விரோதத்தில் வாலிபர்களை அரிவாளால் வெட்டிய கும்பல்

    • தனது நண்பருடன் காளியம்மன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காரை மறித்து நகை பறிக்க முயன்ற வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர்கள் என தெரிய வந்தது.

    பழனி:

    பழனி 1-வது வார்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் சாலமன் (வயது21). இவர் தனது நண்பர் மாரி முத்துவுடன் காளியம்மன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் திடீரென 10-க்கும் மேற்பட்ட வாலி பர்கள் பயங்கர ஆயுதங்க ளுடன் இருவரையும் தாக்கினர். மேலும் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்று கூடினர்.

    இதை பார்த்ததும் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாரிமுத்து, சாலமன் ஆகியோரை பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காரை மறித்து நகை பறிக்க முயன்ற வழக்கில் மாரிமுத்து மற்றும் சாலமன் ஆகியோர் கைதாகி சிறைக்கு சென்றவர்கள் என தெரிய வந்தது. எனவே அதில் ஏற்பட்ட முன்வி ரோதம் காரணமாக வாலிபர்கள் தாக்கப்பட்டிரு க்கலாம். மேலும் தாக்குதல் நடத்திய கும்பலை போலீ சார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×