search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் பழ வியாபாரி தற்கொலை
    X

    செங்கோட்டையில் பழ வியாபாரி தற்கொலை

    • மனைவி இறந்து விட்டதால் கடைசி மகன் வீட்டில் கிருஷ்ணசாமி இருந்து வந்தார்.
    • கிருஷ்ணசாமி இன்று அதிகாலை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கரையாளர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது 78). இவர் அப்பகுதியில் பழக் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், அவரது மனைவி இறந்து விட்டதால் கடைசி மகன் வீட்டில் இருந்து வந்தார்.

    சமீபத்தில் அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்ப ட்டுள்ளது. அப்போது வயது முதிர்வின் காரணமாக அவருக்கு பக்க விளைவு ஏற்பட்டு மிகவும் அவதி அடைந்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கிருஷ்ணசாமி இன்று அதிகாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கிருஷ்ணசாமி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×