என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை அருகே எரிந்து கிடந்த இருசக்கர வாகனத்தால் பரபரப்பு
    X

    சாலையோரத்தில் எரிந்த நிலையில் கிடந்த பைக்கை படத்தில் காணலாம்.

    வடமதுரை அருகே எரிந்து கிடந்த இருசக்கர வாகனத்தால் பரபரப்பு

    • வாகனத்திற்கு யாரேனும் தீ வைத்து சென்று விட்டனரா அல்லது வேறு ஏதும் குற்ற சம்பவங்கள் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
    • இரவு திடீரென பைக் தீப்பிடித்ததாகவும், பைக்கை சாலை ஓரத்தில் நிறுத்தி தண்ணீர் ஊற்றி அணை த்துவிட்டு அப்படியே வீட்டிற்கு சென்று விட்டதாக வும் தெரியவந்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருசக்கர வாகனம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசா ரணையில் ஈடுபட்டனர். வாகனத்திற்கு யாரேனும் தீ வைத்து சென்று விட்டனரா அல்லது வேறு ஏதும் குற்ற சம்பவங்கள் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது இரவு திடீரென பைக் தீப்பிடித்ததாகவும், பைக்கை சாலை ஓரத்தில் நிறுத்தி தண்ணீர் ஊற்றி அணை த்துவிட்டு அப்படியே வீட்டிற்கு சென்று விட்டதாக வும் தெரியவந்தது.

    இருப்பினும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் போலீ சார் அவரை எச்சரித்தனர். சாலை ஓரம் இருசக்கர வாகனம் எரிந்த நிலையில் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×