என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொக்லைன் எந்திரத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட விவசாயி
    X

    பொக்லைன் எந்திரத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட விவசாயி

    • ராஜா கண்ணு (வயது 52), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அவருடைய வீட்டின் அருகி லுள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
    • குடிநீர் குழாய் பைப் லைனுக்கு குழி தோண்டி கொண்டிருந்த பொக்லைன் எந்திர டிரைவரின் கவனக் குறைவால் விவசாயி ராஜாகண்ணு எந்திரத்தில் சிக்கினார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி ஊராட்சி, பழக்காரனுர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ராஜா கண்ணு (வயது 52), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அவருடைய வீட்டின் அருகி லுள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக குடிநீர் குழாய் பைப் லைனுக்கு குழி தோண்டி கொண்டிருந்த பொக்லைன் எந்திர டிரைவரின் கவனக் குறைவால் விவசாயி ராஜாகண்ணு எந்திரத்தில் சிக்கினார். இதனால் அவர் 5 அடி தூரம் தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி ராஜா கண்ணுவின் மகன் ராசுக்குட்டி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×