என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணத்திலும் பிரியாத தம்பதி மனைவி இறந்த துக்கத்தில் கணவர் சாவு
    X

    கிருஷ்ணகவுண்டர்-சீரங்கம்மாள்.

    மரணத்திலும் பிரியாத தம்பதி மனைவி இறந்த துக்கத்தில் கணவர் சாவு

    • கிருஷ்ண கவுண்டர் - சீரங்கம்மாள் தம்பதி சென்றாயனூர் மாரியம்மன் கோவில் பகுதியில் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
    • மனைவி இறந்ததால், கடந்த 2 நாட்களாக கிருஷ்ண கவுண்டர் மனவேதனையில் இருந்தார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம், தேவூர் அருகே சென்றாயனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண கவுண்டர் (வயது 72), விவசாயி. இவரது மனைவி சீரங்கம்மாள். தம்பதியினர்க்கு தனலட்சுமி, அலமேலு ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் கிருஷ்ண கவுண்டர் - சீரங்கம்மாள் தம்பதி சென்றாயனூர் மாரியம்மன் கோவில் பகுதியில் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 24-ந் தேதி காலை சீரங்கம்மாள் (70) உயிர் இழந்தார். மனைவி இறந்ததால், கடந்த 2 நாட்களாக கிருஷ்ண கவுண்டர் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை திடீரென மனைவியை நினைத்து அழுத கிருஷ்ண கவுண்டர், மூச்சு அடைத்து இறந்து போனார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×