search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய் நார் தொழிற்சாலை எரிந்து நாசம்
    X

    தேங்காய் நார் தொழிற்சாலை எரிந்து நாசம்

    • இரவு தொழிற்சாலையில் திடீரென புகை வந்தது.
    • ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கன் (வயது47). இவர் அப்பகுதியில் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு இவரது தொழிற்சாலையில் திடீரென புகை வந்தது. தீ மளமள வென பற்றி எரிந்தது.

    இது குறித்து போச்சம்பள்ளி, ஊத்தங்கரை தீயணைப்பு நிலைங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

    இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசாார் வழக்குபதிவு செய்து மின்கசிவு காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமாக விபத்து நடந்துள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×