என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரஞ்சித்
கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சாவு
- குழந்தைகளை பாட்டியிடம் விட்டு விட்டு தாய், தந்தை இருவரும் கட்டிட வேலைக்காக பெங்களூருக்கு சென்று வேலை பார்த்து வந்தனர்.
- விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை ரஞ்சித் வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சாலா. இவர்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ரஞ்சித் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
குழந்தைகளை பாட்டியிடம் விட்டு விட்டு தாய், தந்தை இருவரும் கட்டிட வேலைக்காக பெங்களூருக்கு சென்று வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை ரஞ்சித் வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தது.
இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






