என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கண்டமனூரில் வனஅதிகாரியை தாக்கி மிரட்டியவர் மீது வழக்கு
- கடந்த 3 மாதங்களாக இவர் வனத்துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.
- கடந்த சில நாட்களாக ஊருக்குள் வந்தது தெரியவரவே வனத்துறையினர் அவரை பிடிக்க சென்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வனவேட்டையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர்.
தப்பி ஓடிய மன்னூத்து பகுதியை சேர்ந்த சவுந்திரபாண்டியன் என்பவரை தேடி வந்தனர். கடந்த 3 மாதங்களாக இவர் வனத்துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக ஊருக்குள் வந்தது தெரியவரவே வனத்துறையினர் அவரை பிடிக்க சென்றனர். வீட்டில் இருந்த சவுந்திரபாண்டியனை விசாரணைக்காக ஜீப்பில் அழைத்துச்சென்றனர்.
அப்போது அண்ணாநகரில் குபேந்திரன் என்பவர் வனத்துறையினரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி சவுந்திரபாண்டியனை விடுவிக்குமாறு கூறினார். ஆனால் வனத்துறையினர் விடாததால் தொடர்ந்து மிரட்டும் தோணியில் பேசினார். இதுகுறித்து வனவர் ஜெயக்குமார் கண்டமனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குபேந்திரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்