என் மலர்
உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி, கட்டிட காண்டிராக்டர் சாவு
- அந்த வழியாக வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனம் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது.
- பாஸ்கரின் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரபள்ளி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது40). கட்டிட காண்டிராக்டர் ஆவார்.
இவர், நேற்று இருசக்கர வாகனத்தில் ஓசூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆர்.டி.ஓ.செக்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனம் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில், பாஸ்கரின் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






