என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மணிப்பூரில் அமைதி திரும்ப கொடைக்கானலில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி
- இன கலவரத்தில் இறந்தவர்களுக்காகவும், மணிப்பூரில் வாழ்வாதாரம் இழந்தவர்களின் மறுவாழ்விற்காகவும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- சிறப்பு பிரார்த்தனைகளும் செய்யப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பவும், அங்கு ஏற்பட்ட இன கலவரத்தில் இறந்தவர்களுக்காகவும், மணிப்பூரில் வாழ்வாதாரம் இழந்தவர்களின் மறுவாழ்விற்காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், மீண்டும் அம்மா நிலத்தில் இயல்பு நிலை திரும்புவதற்காகவும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொடைக்கானல் முன்னாள் நகர் மன்ற தலைவர் டாக்டர் குரியன் ஆபிரகாம் தலைமை தாங்கினார். கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் முகமது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முஸ்லிம் ஜமாத்தைச் சேர்ந்தவர்களும், சி.எஸ்.ஐ. போதகர்கள் ஜெகதீஷ் கிருபாகரன், வேத முத்து, பிரசாத், கத்தோலிக்க சகோதரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.
சிறப்பு பிரார்த்தனைகளும் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்