search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம்
    X

    வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம்

    • மதியரசு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான்.
    • தந்தை ஆதிமூலம் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் காட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் மதியரசு (வயது6).

    இந்த சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து விட்டு சிறுவன் வீட்டிற்கு வந்தான். பின்னர் அந்த மதியரசு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டின் வெளியே வந்து பார்த்த போது அந்த சிறுவனை காணவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் மதியரசு கிடைக்காததால், சிறுவன் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து தந்தை ஆதிமூலம் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வழி தவறி வேறு எங்கேயாவது சென்று விட்டனா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×