என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி
- கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
- கரடி வந்து செல்லும் காட்சி சி.சி.டிவி காட்சியில் பதிவாகியது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னர். கோத்தகிரி அரவேணு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கரடி உலா வந்துள்ளது. கரடி வந்து செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டிவி காட்சியில் பதிவாகி உள்ளது. அடிக்கடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






