என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் சுற்றிய கரடி
    X

    கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் சுற்றிய கரடி

    • கோத்தகிரியில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது
    • 3 கரடிகள் பிடிக்கப்பட்டு வனப் பகுதியில் கொண்டு விடப்பட்டன.

    ஊட்டி

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னா். ஏற்கெனவே இப்பகுதியில் மூன்று கரடிகள் பிடிக்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது,

    எனவே , அசம்பாவிதங்கள் நடக்கும் முன் குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    Next Story
    ×