என் மலர்
உள்ளூர் செய்திகள்

103 வயதான சுதந்திர போராட்ட தியாகி ஐ.என்.டி.யு.சி.கொடியை ஏற்றி வைத்தார்
- சுதந்திர போராட்ட தியாகி சி.எம்.மரிசாமி கவுடா, ஐ.என்.டி.யு.சி.கொடியேற்றிவைத்தார்.
- மத்திய போக்குவரத்து தர்மபுரி மண்டல நிர்வாகிகள் மணிமொழி, தங்கவேல், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஓசூர்,
ஓசூரில், மே தினத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, 103 வயதான சுதந்திர போராட்ட தியாகி சி.எம்.மரிசாமி கவுடா, ஐ.என்.டி.யு.சி.கொடியேற்றிவைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு, மத்திய போக்குவரத்து தர்மபுரி மண்டல நிர்வாகிகள் மணிமொழி, தங்கவேல், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓய்வு பெற்ற நடத்துனர் சோமசேகரன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில், சுந்தரம் நன்றி கூறினார்.
Next Story






