என் மலர்
உள்ளூர் செய்திகள்

நன்னடத்தை ஆணையை மீறியவருக்கு 93 நாள் சிறை
- பாபுவை கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக பாபுவை 93 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். அதையொட்டி காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் சதாவரத்தை சேர்ந்த பாபு என்ற லொட்டை பாபு (வயது 26) நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாபுவை கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக பாபுவை 93 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
Next Story