search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லில் 92 கிலோ மீன்கள் பறிமுதல்
    X

    மீன் விற்பனைக்கூடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    ஒகேனக்கல்லில் 92 கிலோ மீன்கள் பறிமுதல்

    • திடீரென ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • அழுகிய நிலையில் இருந்த 92 கிலோ மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மண்ணில் குழி தோண்டி கொட்டப்பட்டு அளிக்கப்பட்டன.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்த பின்பு அம்மியில் அரைத்து சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை ருசித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள மீன் கூடங்களில் அழுகிய நிலையில் உள்ள பழைய மீன்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்து கெட்டுப்போன மீன்களை அளித்தனர்.

    இந்நிலையில் மீண்டும் பொதுமக்களின் அடுக்கடுக்கான புகார்கள் அதிக அளவில் சென்றதால், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா தலைமையில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை அலுவலர் வேலுச்சாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து இன்று திடீரென ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    இதனை அடுத்து மீன்கள் மீது பார்மலின் கெமிக்கல் பூசப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்பொழுது மீன்களில் எவ்வித பார்மிலினும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அனைத்து கடைகளிலும் சோதனையிட்டதில் ஒரு சில கடைகளில் இருந்து தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 92 கிலோ மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மண்ணில் குழி தோண்டி கொட்டப்பட்டு அளிக்கப்பட்டன.

    மேலும் இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் மீன் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி மீண்டும் இது போல் அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர் .

    Next Story
    ×