search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில்  241 ரேஷன் கடைகளில் 750 டன் அரிசி தயார் நிலையில் உள்ளது
    X

    கடலூர் மாவட்டத்தில் 241 ரேஷன் கடைகளில் 750 டன் அரிசி தயார் நிலையில் உள்ளது

    • கடலூர் மாவட்டத்தில் இன்று வழக்கத்தை விட மிக அதிக கன மழை பெய்யும்.
    • 68 நபர்கள் கடலூர் மாவட்டத்தில் வந்துள்ளனர்.

    கடலூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று வழக்கத்தை விட மிக அதிக கன மழை பெய்யும். மேலும் பலத்த காற்று வீசப்படும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே 42 புயல் பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன . இதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என 68 நபர்கள் கடலூர் மாவட்டத்தில் வந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் மாண்டஸ் புயல் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்தால் 278 இடங்கள் பாதிக்கப்படக்கூடும் என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு துறையினர், மின்சாரத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 241 ரேஷன் கடைகளில் சுமார் 750 டன் அரிசி பேரிடர் காலத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்கப்பட உள்ள பொதுமக்களுக்கு பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே சேமிக்கப்பட்டு உள்ளது. மேலும் 241 ரேஷன் கடைகள் இருக்கக்கூடிய பகுதிகள் அதிக பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்கும் சமயத்தில் எளிமையாக ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகள் கொண்டு சென்று மக்களுக்கு உணவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில் பேரிடர் பெருமளவில் பாதிப்பு ஏற்படாமல் அரிசிகள் இருந்தால் ஜனவரி மாதம் முதல் அதனை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படும். ஆகையால் இதன் மூலம் பொது மக்களுக்கு மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு உடனுக்குடன் கிடைப்பதற்கு ஏதுவாக அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×