என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அய்யூர் வனப்பகுதியில் 70 யானைகள் முகாம்: இரவு நேரத்தில் வனப்பகுதியையொட்டி விளை நிலங்களில் காவலுக்கு யாரும் செல்ல வேண்டாம்
- தளி அருகே அய்யூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்கனவே 50 யானைகள் உள்ளன.
- அந்த ஏரியில் தண்ணீர் குடித்தும், ஆனந்த குளியல்போட்டும் வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இதைத் தவிர கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் அக்டோபர், நவம்பர் மாதத்தில் வருவது வழக்கம். ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரக்கூடிய இந்த யானைகள் தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஜவளகிரி, சான மாவு, போடூர்பள்ளம், ஊடேதுர்க்கம் என பல வனப்பகுதிகளில் பிரிந்து விவசாய பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து வருகின்றன.
இந்த ஆண்டும் வழக்கம் போல 100-க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடகா வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்துள்ளன. அவை விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. தளி அருகே அய்யூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்கனவே 50 யானைகள் உள்ளன.
அவற்றுடன் தற்போது வந்துள்ள கர்நாடக யானைகளில் இருந்து 20 பிரிந்து அங்கு சென்றுள்ளன. இந்த 70 யானைகளும் அய்யூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவை சாமஏரியில் தண்ணீர் குடித்தும், குளித்தும் மகிழ்கின்றன. சாமஏரியில் தண்ணீர் குடிக்க வரும் யானைகள் கூட்டத்தை அந்த வழியாக செல்ல கூடிய பொதுமக்கள் பார்த்து செல்கிறார்கள்.
மேலும் சிலர் செல்போன்களில் படம் பிடித்து வருகிறார்கள். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் யானைகள் கூட்டம் பல குழுக்களாக பிரிந்துள்ளன.
சானமாவு காப்பு காட்டில் பாலேகொண்டா ஏரி பகுதியில் 50 யானைகள்
முகாமிட்டுள்ளன. அவை அந்த ஏரியில் தண்ணீர் குடித்தும், ஆனந்த குளியல்போட்டும் வருகின்றன. இந்த யானைகள் எந்த நேரமும் ஓசூர்-ராயக்கோட்டை சாலையை கடந்து போடூர் பள்ளம் வனப்பகுதிக்குள் வரலாம் என்பதால் வனத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
மேலும் யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி, பாத்தகோட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம் என்பதால் யானைகளின் நடமாட்டத்தை வனத்து றையினர் தீவிரமாக கண்கா ணித்து வருகிறார்கள்.
வனப்பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் ஆடு, மாடுகளை மேய்க்க வர வேண்டாம். மேலும் இரவு நேரத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் காவலுக்கு யாரும் இருக்க வேண்டாம் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்