search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் உட்பட 7 பேரை கடித்து குதறிய வெறி நாய்கள்
    X

    வெறி நாய் கடித்து சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களில் சிலர்.

    பெண் உட்பட 7 பேரை கடித்து குதறிய வெறி நாய்கள்

    • சுற்றி திரியும் வெறிநாய் அப்பகுதியை சேர்ந்த பெண் உட்பட ஏழு பேரை கடித்து குதறியது.
    • கறவை மாடுகளை குறி வைத்து வெறி நாய்கள் அடுத்தடுத்து கடித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள சி.எம்.புதூர் தெருக்களில் சுற்றி திரியும் வெறிநாய் அப்பகுதியை சேர்ந்த பெண் உட்பட ஏழு பேரை கடித்து குதறியது. இது தவிர வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளையும், குறிப்பாக பால் கறக்க கூடிய கறவை மாடுகளை குறி வைத்து வெறி நாய்கள் அடுத்தடுத்து கடித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    மாரண்டஅள்ளி அடுத்த சி.எம். புதூர் மற்றும் குஜ்லார அள்ளி பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 30), திம்மக்கா (50) ,விக்னேஷ் (20) , முருகன் (45), முனுசாமி (50), முனிராஜ் (50), கோவிந்தராஜ் (35) உட்பட ஏழு பேரை வெறி நாய்கள் கடித்து குதறியதில், காயமடைந்த அவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வெறி நாய்களின் அட்டகாசம் தொடர்வதால், கிராமவாசிகள் வீடுகளை விட்டு வெளியே நடமாடுவதற்கு பயந்து , எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர். பொதுமக்களையும், கால்நடைகளையும் கடித்து குதறி வரும் வெறி நாய்களை ஒழித்து கட்டி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என சிக்மாரண்டஅள்ளி ஊராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சி.எம்.புதூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×