என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபோதையில் வாகனம் இயக்கிய 69 பேருக்கு ரூ.6.9 லட்சம் அபராதம்
    X

    மதுபோதையில் வாகனம் இயக்கிய 69 பேருக்கு ரூ.6.9 லட்சம் அபராதம்

    • கள்ள தனமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர், 3 கஞ்சா வழக்குகள், புகையிலை பொருட்கள், 2 லாட்டரி வழக்குகள் உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் மதுபோதையில் வாகனம் இயக்குவோர் மீது நட வடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதையொட்டி தருமபுரி மாவட்டம், முழுவதும் போலீசார் சிறப்பு வாகன தணிக்கை மேற் கொண்டனர்.

    அப்போது மது போதையில் வாகனம் இயக்கியதற்காக தருமபுரி காவல் உட்கோட்டத்தில் 15 பேர், அரூர் உட்கோட்டத்தில் 18 பேர், பென்னாகரம் உட்கோட்டத்தில் 17 பேர், பாலக்கோடு உட்கோட்டத்தில் 19 பேர் என 69 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் இருந்து ரூ.6.9 லட்சம் அபராதம் போலீசார் வசூலித்தனர்.

    இதை தவிர சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர், 3 கஞ்சா வழக்குகள், புகையிலை பொருட்கள், 2 லாட்டரி வழக்குகள், புகையிலை பொருட்கள் விற்றதாக 6 பேர் மீதும் வழக்குகள் செய்யப் பட்டன.

    இவை தவிர, கள்ளதனமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×