search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வில் 604 பேர் ஆப்செண்ட்
    X

    கோப்பு படம்.

    தேனி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வில் 604 பேர் ஆப்செண்ட்

    • காலையில் பொது அறிவு மற்றும் மதியத்தில் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 2367 ஆண்கள், 517 பெண்கள் என மொத்தம் 2884 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 618 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தேனி:

    தமிழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு வீரர்களுக்கு ஆட்கள் சேர்ப்பதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு ஆணையம் எழுத்து தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் 3488 பேர் விண்ணப்பி த்திருந்தனர். இதற்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றது. காலையில் பொது அறிவு மற்றும் மதியத்தில் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 2367 ஆண்கள், 517 பெண்கள் என மொத்தம் 2884 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    ெமாத்தம் 604 பேர் ஆப்செண்ட் ஆகினர். இதில் 477 ஆண்களும், 127 பெண்களும் அடங்குவார்கள். தேர்வு மையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 618 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை காவலர் பயிற்சி கல்லூரி பயிற்சித்துறை தலைவர் தமிழ்சந்திரன், தணிக்கை அலுவலராக நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை நேரடியாக பார்வையிட்டார் என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் ேடாங்கரே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×