

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீசார் கர்ணபள்ளி பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது அங்கு பணம் வைத்து சூதாடி பேரிகை அண்ணாநகர் அபிலாஷ் (27),பசவராஜ் (26), சூளகிரி நாகராஜ் (25),ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர் .மேலும் ரூ.2 லட்சத்து 7ஆயிரம், 8 மோட்டார் சைக்கிள், 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதே போல் ஓசூர் சிப்காட் போலீசார் சிப்காட் சின்ன எலசகிரி அருகே ரோந்து பணியில் அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த பசுபோமச்சி (23), அருண்ஓரங் (23), நூர்ஜல்இஸ்லாம் (21), இவர்கள் மூன்று பேரும் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பணம் ரூ.570 பறிமுதல் செய்யப்பட்டது.