என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வில்லிவாக்கம் ரவுடி கொலையில் 6 பேர் கைது
- வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- விஜி மற்றும் அலெக்ஸ், ராஜேஸ், சுரேஷ், செல்வம், ராஜி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:
சென்னை வில்லிவாக்கத்தில் ரவுடி கல்லறை அப்பு நேற்று முன்தினம் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் விஜி என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவுடி அப்புவை வெட்டிக்கொன்றது தெரிய வந்தது.
இதையடுத்து விஜி மற்றும் அலெக்ஸ், ராஜேஸ், சுரேஷ், செல்வம், ராஜி, ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். ரவுடி அப்பு, மகேஷ் என்பவரிடம் தனது ஆட்டோவை வாடகைக்கு கொடுத்திருந்தார். இந்த வாடகை பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு மெக்கானிக் விஜி கொடுக்காமல் ஏமாற்றியதால் ஏற்பட்ட தகராறில்தான் அப்பு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அப்பு, விஜியை கொன்று விடுவதாக மிரட்டியதால் விஜி முந்திக்கொண்டு அப்புவை போனில் அழைத்து நேரில் வரவழைத்து கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்