search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வில்லிவாக்கம் ரவுடி கொலையில் 6 பேர் கைது
    X

    வில்லிவாக்கம் ரவுடி கொலையில் 6 பேர் கைது

    • வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • விஜி மற்றும் அலெக்ஸ், ராஜேஸ், சுரேஷ், செல்வம், ராஜி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    சென்னை வில்லிவாக்கத்தில் ரவுடி கல்லறை அப்பு நேற்று முன்தினம் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் விஜி என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவுடி அப்புவை வெட்டிக்கொன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து விஜி மற்றும் அலெக்ஸ், ராஜேஸ், சுரேஷ், செல்வம், ராஜி, ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். ரவுடி அப்பு, மகேஷ் என்பவரிடம் தனது ஆட்டோவை வாடகைக்கு கொடுத்திருந்தார். இந்த வாடகை பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு மெக்கானிக் விஜி கொடுக்காமல் ஏமாற்றியதால் ஏற்பட்ட தகராறில்தான் அப்பு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அப்பு, விஜியை கொன்று விடுவதாக மிரட்டியதால் விஜி முந்திக்கொண்டு அப்புவை போனில் அழைத்து நேரில் வரவழைத்து கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×