என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் மதுபாட்டிலை பதுக்கி விற்ற 6 பேர் கைது
- 118 மதுபாட்டில்கள்-ரூ.2340 பறிமுதல் செய்தனர்.
- போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோத்தகிரி,
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நீலகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மதுபாட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊட்டி, கோத்தகிரி போலீசார் அந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோத்தகிரி போலீசார் கட்டபெட்டு பகுதியில் மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஊட்டியை சேர்ந்த நாகராஜ்(வயது 27), ராம்சந்த் பகுதியில் அனையட்டியை சேர்ந்த சந்திரன் (52), கப்பட்டியை சேர்ந்த பன்னீர் செல்வம் (49), ராப்ராய் பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம் (45), குமரவேல் (70)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 113 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஊட்டி போலீசார் தேவர் சோலை பஜார் பகுதியில் மதுபாட்டிலை பதுக்கி விற்ற அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (53) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபாட்டிகள் மற்றும் ரூ.1990-யை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒேர நாளில் மதுபாட்டிலை பதுக்கி விற்ற 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 118 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.2340-யை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்