search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    50 மூட்டை குட்கா பறிமுதல்
    X

    50 மூட்டை குட்கா பறிமுதல்

    • இரவு 12 மணியளவில் சந்தேகப்படும் விதமாக வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 50 மூட்டை குட்காவையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கீழ்க்கொல்லப்பட்டி கிராமத்தில் இரவு 12 மணியளவில் சந்தேகப்படும் விதமாக வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் 50 மூட்டை குட்கா இருப்பது தெரியவந்தது.

    இதை அறிந்த பகுதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாது மற்றும் ஊர் பொதுமக்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 50 மூட்டை குட்காவையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×