என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வத்தலக்குண்டுவில் 22 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    வத்தலக்குண்டுவில் 22 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    • அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய ப்படுவதாக தென்மண்டல ஐ.ஜி அஷ்ராகார்க்கிற்கு வந்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமை யிலான போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவல் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பொருட்களை சோதனை செய்ததில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை கடத்தி வந்த மல்லையா புரத்தை சேர்ந்த கார்த்திக்(35), சித்தையன்கோட்டையை சேர்ந்த விஜயராகவன்(26), வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்த பாரதிதாசன் மனைவி பாண்டி ச்செல்வி(35), சுந்தர்ராஜ்(49), உசிலம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மனைவி சித்ரா(31) என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள் பாண்டி ச்செல்வி வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பாண்டிச்செல்வி வீட்டிற்கு சென்று ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×