search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 5 பேர் கைது
    X

    பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 5 பேர் கைது

    • வேலை கொடுக்க உதவி செய்கிறேன் எனக் கூறியதுடன் காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வர சொல்லி உள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    காரிமங்கலம்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் குந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுந்தரி என்பவரிடம் வேலை கேட்டுள்ளார்.

    அப்போது சுந்தரி அந்தப் பெண்ணிடம் வேறு யாராவது இருந்தால் அவர்களையும் அழைத்து வா அவர்களுக்கும் வேலை கொடுக்க உதவி செய்கிறேன் எனக் கூறியதுடன் காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வர சொல்லி உள்ளார்.

    இதை நம்பி 3 பெண்களும் காரிமங்கலத்திற்கு வந்த நிலையில் அவர்களை கிருஷ்ணகிரி பைபாஸ் ரோடு அகரம் பிரிவு ரோடு அருகே உள்ள தனியார் லாட்ஜிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த நான்கு பேர் மூன்று பெண்களிட மும் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். இதனால் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.

    இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த தருமபுரி மாவட்டம், பிக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (32 ), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (29) காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (49), பனக முட்லு பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (45), குந்தார அள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி (34) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தலைமறைவான லாட்ஜ் ஓனர் லட்சுமணன் என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×