என் மலர்
உள்ளூர் செய்திகள்

காயமடைந்த பெண் தொழிலாளர்களை படத்தில் காணலாம்.
சாணார்பட்டி அருகே தேனீக்கள் கொட்டியதில் 42 பேர் காயம்
- 100 நாள் திட்ட பெண் தொழிலாளர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் 42 பெண்கள் காயமடைந்தனர்.
- காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வி.குரும்பபட்டி புதுக்குளம் ஓடையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் இன்று 112 பெண் தொழிலாளர்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் அந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிரு ந்தபோது தேனீக்கள் திடீரென பெண் தொழிலா ளர்களை கொட்டத் தொடங்கியது. இதனால் அங்கிருந்த பெண்கள் அலறியடித்து ஓடினர். எனினும் தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது.
இதில் 42 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, செயலாளர் மார்ட்டின் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 42 பெண் தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபா ல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் காயமடைந்த தொழிலாளர்கள் சிறிது நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பினர். இதில் பலத்த காயமடைந்த கோபால்பட்டியைச் சேர்ந்த முருகாயி (வயது 60), தெய்வானை (54), ராஜேஸ்வரி (65), மைதிலி (54), மாரியம்மாள் (68) ஆகிய 5 பேர் மேல் சிகிச்சை க்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பரபர ப்பான சூழ்நிலை நிலவியது.






