என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோர்ட்டில் ஆஜரானவர்களை படத்தில் காணலாம்.
சிலை வைத்த வழக்கு நத்தம் கோர்ட்டில் 42 பேர் ஆஜர்
- நத்தம் போலீசார் முறையாக அனுமதி பெறாமல் சிலை வைக்கபட்டதாக கூறி ஜே.சி.பி. எந்திரம் மூலம் சிலையை அகற்றினர்.
- இச்சம்பவம் தொடர்பாக வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட 42 பேர் மீது நத்தம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நத்தம்:
நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட எர்ரம்பட்டியில் கடந்த 2016-ம் ஆண்டு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் முத்தரையர் சிலை வைக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் முறையாக அனுமதி பெறாமல் சிலை வைக்கபட்டதாக கூறி ஜே.சி.பி. எந்திரம் மூலம் சிலையை அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட 42 பேர் மீது நத்தம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று நத்தம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட 42 பேரும் நீதிபதி முன்பு ஆஜராகினர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நத்தம் நீதிபதி உதயசூரியா வருகிற 5-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.






