search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில்  4 சிறுவர்கள்  அதிரடி கைது
    X

    கள்ளக்குறிச்சியில் 4 சிறுவர்கள் அதிரடி கைது

    • கள்ளக்குறிச்சியில் 4 சிறுவர்கள் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
    • கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் சென்றபோது அங்கு நின்ற 16 மற்றும் 17 வயதுடைய 4 சிறுவர்கள் பஸ்ஸை நிறுத்துமாறு கை காட்டி உள்ளனர். ஆனால் பஸ் நிற்காமல் சென்றது இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் பஸ்சை துரத்திச் சென்று வழிமறித்து டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை பஸ் பக்கவாட்டில் அடித்தனர். இதில் பீர் பாட்டில் உடைந்து சிதறியது. இதில் பஸ்சில் பயணம் செய்த கோயம்புத்தூர் மாவட்டம், செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சீனிவாசன் (வயது 38) என்பவரின் கண்ணில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அந்த 4 நபர்களையும் மடக்கி பிடித்து ஆட்டோவில் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த சீனிவாசன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். 4 சிறுவர்கள் பஸ்சை வழிமறித்து பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×