என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்திற்கு நீர், நிலவள திட்டத்திற்கு ரூ.3,650 கோடி ஒதுக்கீடு
    X

    மேட்டூரில் நீர்வள மற்றும் நிலவளத்திட்டம் குறித்து கலந்துரையாடல் கூட்டம் திட்ட இயக்குனர் தென்காசி ஜவகர் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    தமிழகத்திற்கு நீர், நிலவள திட்டத்திற்கு ரூ.3,650 கோடி ஒதுக்கீடு

    • ரூ.128.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள்
    • மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்

    மேட்டூர்:

    தமிழ்நாடு நீர்வளம் மறறும் நிலவளத் திட்டத்தின் மூலம் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங் களைச் சேர்ந்த நீர்வ ளத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறி யியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, மீன்வ ளத்துறை மூலம் ரூ.128.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தென்காசி ஜவகர் நேற்று மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார்.

    இதில் நீர்வள மேலாண்மை நிபுணர் டாக்டர் கிருஷ்ணன், வேளாண்மை பொறியியல் துறை நிபுணர் சந்திரசேகரன், கால்நடை பராமரிப்பு துறை நிபுணர் டாக்டர் மனோ கரன், தோட்டக்கலைத்துறை நிபுணர் டாக்டர் வித்யாசா கர், நீர்வளத்துறை கண்கா ணிப்பு பொறியாளர்கள் கவுதமன், அன்பழகன், நீர்வளத்துறை செயற்பொ றியாளர்கள் அருள், அழ கன், சிவக்குமார், ஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கலந்தாய்வில், இத்திட்டத்தி னால் பெறப்பட்ட பயன்கள் குறித்து அரசு அலுவலர்களி டம் கருத்து கேட்கப்பட்டது.

    கூட்டத்திற்கு பின்னர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தென்காசி ஜவ கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    இந்த திட்டமானது உலக வங்கி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசு நிதி ஆகியவை சேர்த்து ரூ.3,650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 33 மாவட்டங்களில் 47 ஆற்று படுகைகளில் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    ஒரு துளி தண்ணீரை கூட விவசாயிகளுக்கு பய னுள்ளதாக ஆக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். 7 துறைகள் மற்றும் 3 பல்கலைக்கழ கங்கள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயி களை நேரில் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டு வருகின்றோம். அடுத்த மாதம் உலக வங்கி சார்பில் 3 குழுக்கள் தமிழகத்திற்கு வருகிறது. இந்த குழுவினர் இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×