search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டமங்கலத்தில்  31 கிராமங்களுக்கு 7-ந் தேதி மின் நிறுத்தம்
    X

    கண்டமங்கலத்தில் 31 கிராமங்களுக்கு 7-ந் தேதி மின் நிறுத்தம்

    • வருகிற 7-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
    • 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் மின்நிலையத்தில் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 7-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேரி, நவமால் மருதூர், சேஷங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தாம் பாக்கம், பக்க மேடு, கலிங்கமலை, கோண்டூர், வெள்ளா ழங்குப்பம், அரங்கநாதபுரம், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரிய பாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம் பாளையம், குயிலா ப்பாளையம், தாண்டவ மூர்த்திகுப்பம், அம்மண ங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்பு துப்பட்டு, கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், திருமங்கலம், ரசப்புத்திரபாளையம் உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்டவாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×