search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் மழைக்கு 3 பெண்கள் பலி
    X

    மதுரையில் மழைக்கு 3 பெண்கள் பலி

    • வைகை வடகரை ஆற்றங்கரை பகுதியில் பெண் பிணம் மிதந்து வருவதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு பெண் பிணம் மிதப்பது தெரிய வந்தது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது வைகை அணை முழு கொள்ளவை எட்டி உள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் வைகை வடகரை ஆற்றங்கரை பகுதியில் பெண் பிணம் மிதந்து வருவதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பிணத்தை மீட்டனர். அது 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் என்பது தெரிய வந்தது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர் மழை வெள்ளத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு பெண் பிணம் மிதப்பது தெரிய வந்தது. அவரது உடலை தெப்பக்குளம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை சேடப்பட்டியையடுத்த அழகு ரெட்டியா பட்டியை சேர்ந்த வீரணன் மனைவி சக்கரைத்தாய் (80). இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் இரவு வீட்டில் படுத்து தூங்கினார். அப்போது கனமழை பெய்தது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×