என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்ற 3 கடைகளுக்கு `சீல்
    X

    குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்ற 3 கடைகளுக்கு `சீல்'

    • 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் குன்னூர் வி.பி.தெருவில் உள்ள சில மொத்த வியாபார கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில், குன்னூர் வருவாய் துறை தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் குழுவினர் அந்த பகதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து அங்கு இருந்த மளிகை கடையிலும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, அந்த கடை சுத்தம், சுகாதாரமின்றி இருந்ததும், குறிப்பிட்ட தேதியை கடந்த பின்னும் அந்த பொருட்களை விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் அந்த கடைக்கு ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து, இனி இதுபோன்று விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

    கோத்தகிரி தினசரி மார்க்கெட்டில் பேரூராட்சி செயலாளர் மணிகண்டன், சுகாதாரத்துறை ஆய்வாளர் ரஞ்சித் திடீர் ஆய்வு மே ற்கொண்டனர்.அப்போது அங்கு சில கடைகளி ல் தடை செய்யப்ப ட்ட பிளாஸ்டி க் பொருட்களை பயன்படு த்தியது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் கைப்பற்றி, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ரூ.31 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×