என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடலூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் சங்க நிர்வாகியை தாக்கிய 3 பேர் கைது
Byமாலை மலர்14 Jun 2023 8:42 AM GMT
- தனியார் பஸ்களில் சந்தா பணம் வசூல் செய்வதாக செல்வத்திற்கு தகவல் கிடைத்தது.
- திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினருக்குள் மோதலாக மாறியது.
கடலூர்:
கடலூர் குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). தனியார் பஸ் சங்க நிர்வாகியாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று கடலூர் பஸ் நிலையத்தில் 3 பேர் எந்தவித அனுமதியும் இன்றி முறையற்ற வகையில் தனியார் பஸ்களில் சந்தா பணம் வசூல் செய்வதாக செல்வத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற செல்வம் 3 பேரிடம் கேட்டபோது, திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினருக்குள் மோதலாக மாறியது.
இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் முருகன் (50), ரவிச்சந்திரன் (55), புருஷோத்தமன் (51) ஆகியோர் மீதும், முருகன் கொடுத்த புகாரின் பேரில் செல்வம் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முருகன், ரவிச்சந்திரன், புருஷோத்தமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X