என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 3 பேர் சிக்கினர்
    X

    கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 3 பேர் சிக்கினர்

    • ஓசூர் பகுதியை சேர்ந்த சதீஷ், மணிகண்டன், மஞ்சு என்பதும் அவர்கள் மூவரும் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
    • இவர்கள் ஏற்கனவே இரண்டு இடங்களில் கொள்ளை நடத்தியதும் தெரியவந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோகுல் நகர் பகுதியில் சந்தேகப்படு ம்படியாக 3 நபர்கள் சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து அங்கு சென்ற டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார், அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ராயக்கோட்டை மற்றும் ஓசூர் பகுதியை சேர்ந்த சதீஷ், மணிகண்டன், மஞ்சு என்பதும் அவர்கள் மூவரும் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

    மேலும் விசாரணையில், ஆண்கள் வேலைக்கு சென்ற பின் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு வீடு வாடகைக்கு கேட்பது போல் வீட்டிற்குள் புகுந்து பெண்களை கட்டிப்போட்டு, நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுவருவதும், இவர்கள் ஏற்கனவே இரண்டு இடங்களில் கொள்ளை நடத்தியதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய கத்தி, கயிறு போன்ற ஆயுதங்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மூவரையும் தைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×