search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பந்தலூர் அருகே தோட்டத்தில் 80 கிலோ பாக்குகள் திருடிய 3 பேர் கைது
    X

    பந்தலூர் அருகே தோட்டத்தில் 80 கிலோ பாக்குகள் திருடிய 3 பேர் கைது

    • தோட்டத்தில் உள்ள பாக்கு மரங்களில் இருந்து பாக்குகள் திருட்டு போனது.
    • ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, பாக்குகள் மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே கொளப்பள்ளியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது தோட்டத்தில் உள்ள பாக்கு மரங்களில் இருந்து பாக்குகள் திருட்டு போனது. இதுகுறித்து சிவகுமார் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், தினேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று கொளப்பள்ளி பஜாரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, பாக்குகள் மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சிவகுமாரின் தோட்டத்தில் திருட்டுபோன 80 கிலோ பாக்குகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து பாக்குகள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 43), யோகேஸ்வரன் (30), கிருஷ்ணமூர்த்தி (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×