என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை
தேனி:
போடி அருகே சடையாள்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது30). இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் அச்சத்தில் இருந்தார். இதனைத்தொடர்ந்து பழனிசெட்டிபட்டியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு அருகே மயிலாடும்பாறையை சேர்ந்தவர் ராசு மனைவி பாக்கியலட்சுமி (74). கடந்த சில நாட்களாக இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷ மருந்தை குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (50). குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்