search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை

    மனஉளைச்சல் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாகவும் தற்கொலை செய்தகொண்டார்கள்.

    தேனி:

    போடி அருகே சடையாள்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது30). இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் அச்சத்தில் இருந்தார். இதனைத்தொடர்ந்து பழனிசெட்டிபட்டியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு அருகே மயிலாடும்பாறையை சேர்ந்தவர் ராசு மனைவி பாக்கியலட்சுமி (74). கடந்த சில நாட்களாக இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷ மருந்தை குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (50). குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×