என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் உள்பட 3 பேர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    இளம்பெண் உள்பட 3 பேர் தூக்குபோட்டு தற்கொலை

    • திருமூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கீழ் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது39). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தும் பலனில்லை. இதனால் மனவருத்ததில் இருந்த ராதாகிருஷ்ணன் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி சீபம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி (வயது27). இவருக்கும் மகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 5மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமூர்த்தி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதுகுறித்து கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மகேஷ்வரிக்கு தெரியவந்தது. இதனால் அவர் கோபித்து கொண்டு திருமூர்த்தியுடன் குடும்ப நடத்தமாட்ேடன் என்று கூறிவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த திருமூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி பொன்னல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் படவேஸ்வரா. இவரது மனைவி லட்சுமி தேவி (வயது21). இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. படவேஸ்வராவும், லட்சுமிதேவியும் கடந்த 2வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக மனவேதனையில் இருந்த லட்சுமி தேவி நேற்று திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 வருடங்கள் ஆனநிலையில் லட்சுமி தேவி இறந்த சம்பவம் குறித்து ஓசூர் டி.எஸ்.பி. பாபுபிரசாத் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×