என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை
- நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா ஜம்மிஎஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி பிரேமா (வயது53). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் நாகரசம்பட்டி அடுத்துள்ள தளி அள்ளி குட்டையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கவுரவன். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (24). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






