என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் சிக்கினர்
    X

    ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் சிக்கினர்

    • அவ்வழியே வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • தேன்கனிக்கோட்டை பகுதியில் அரிசியை வாங்கி கர்நாடகாவிற்கு கடத்த இருந்த கண்டுபிடிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, சப் -இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, மூர்த்தி, நேரு ஆகியோர், ஓசூர் அடுத்த கும்மளாபுரரம் சோதனை சாவடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில், 1050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கார் டிரைவரான கர்நாடக மாநிலம் ஆனேக்கலை சேர்ந்த அல்லாபகஸ்(வயது26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் அரிசியை வாங்கி கர்நாடகாவிற்கு கடத்த இருந்த கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அரிசி மற்றும் கார் உரிமையாளரான மத்திகிரியை சேர்ந்த மாமூத்(எ)முகமதை தேடி வருகின்றனர்.

    இதே போல், இந்த குழுவினர் காவேரிப்பட்டணம் அடுத்த கருக்கன்சாவடி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு வந்த இருசக்கர வாகனத்தில் ஒருவர் அரிசி மூட்டையை எடுத்து வந்ததை நிறுத்தி சோதனை செய்தனர். அது ரேஷன் அரிசி என கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த அரிசியை எடுத்து வந்தவர், கருக்கன்சாவடி, நரிமேடு, முனியப்பன்கொட்டாய், போத்தாபுரம்

    பகுதியில் இருந்து வாங்கி வந்து, அதை காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள நிப்பட் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அவ்வாறு வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசியை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அரிசியை வாங்கி வந்த நரிமேடு பகுதியை சேர்ந்த வேடியப்பன்(55) என்பவரையும், அரிசியை வாங்கி வர கூறிய கருக்கன்சாவடி மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(48) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×