search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 3 பசு, 2 குரங்குகள் பலி
    X

    அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூன்று பசு மாடு மற்றும் இரண்டு குரங்குகள் பலி .

    திட்டக்குடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 3 பசு, 2 குரங்குகள் பலி

    • திட்டக்குடி அடுத்துள்ள கொரக்கை கிராமத்தில் 3 பசு மாடுகள் நேற்று வீட்டின் அருகே உள்ள வயல் வெளியில் மேய்ந்து வந்தன.
    • வயலில் மின்கம்பி அறுந்து கிடந்து அதில் 3 மாடுகளும் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், அதன் அருகே 2 குரங்குகளும் சிக்கி பலியாகி இருந்தது.

    திட்டக்குடி, ஏப்.26-

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கொரக்கை கிராமத்தைச் சேர்ந்த அங்கம்மாள், ஈஸ்வரி, வள்ளி ஆகியோரின் 3 பசு மாடுகள் நேற்று வீட்டின் அருகே உள்ள வயல் வெளியில் மேய்ந்து வந்தன. இரவு வெகுநேரமாகியும் பசுமாடு மீண்டும் வீட்டுக்கு வராததால் பல இடங்களில் தேடினர். ஆனால், மாடுகள் கிடைக்கவில்லை

    இந்நிலையில் இன்று அதிகாலை கொரக்கையிலிருந்து ஆலம்பாடி கிராமத்திற்கு செல்லும் சாலை ஒரமாக உள்ள வயல்வெளியில் தேடிப்பார்த்த போது வாகையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் வயலில் மின்கம்பி அறுந்து கிடந்து அதில் 3 மாடுகளும் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், அதன் அருகே 2 குரங்குகளும் சிக்கி பலியாகி இருந்தது.

    கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராஜமாணிக்கம் தனது வயல்வெளிக்கு மின்சாரம் தேவையில்லை என எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. மின் வாரிய அதிகாரிகளின் அலட்சி யத்தால் 3 பசு மாடு மற்றும் 2 குரங்குகள் பலியாகி உள்ளன. இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×