search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கலூர் வாகன விபத்தில் 3 கார்கள் சேதம்
    X

    பொங்கலூர் வாகன விபத்தில் 3 கார்கள் சேதம்

    • கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண் டிருந்தது.
    • அவினாசிபாளையம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பொங்கலூரில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தில் இருந்து கிழக்கு நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் பின்னால் மற்றொரு கார் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அது எதிர்பாராத விதமாக முன்னால் வந்த கார் மீது மோதியதில் அந்த காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

    மேலும் இதில் காயம் அடைந்த அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×