search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அயனாவரத்தில் 3 ஆட்டோக்கள் தீவைத்து எரிப்பு
    X

    அயனாவரத்தில் 3 ஆட்டோக்கள் தீவைத்து எரிப்பு

    • நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர்கள் ஆட்டோக்களுக்கு தீ வைத்துள்ளனர்.
    • ஆட்டோ டிரைவர்கள் அயனாவரம் போலீசில் புகார் செய்தனர்.

    அம்பத்தூர்:

    அயனாவரம் திருவள்ளுவர் நகர் கலைஞர் தெருவை சேர்ந்தவர்கள் பாபு (வயது51), சங்கர் (50), விஜயகுமார் (38). ஆட்டோ டிரைவர்களான இவர்கள் வி.பி.காலனி அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நேற்று இரவு தங்களுடைய ஆட்டோக்களை நிறுத்தி விட்டு சென்றனர். நள்ளிரவு 12 மணி அளவில் யாரோ மர்ம நபர்கள் ஆட்டோக்களுக்கு தீ வைத்துள்ளனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் ஆட்டோ முழுவதும் சேதம் அடைந்தது.

    இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் அயனாவரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி பதிவுகளை பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×