என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
    X

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

    • கிராமத்தில் புகையிலை விற்பனை செய்துள்ளனர்.
    • 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் உத்தனப்பள்ளி ஸ்டேஷன் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது ராயக்கோட்டை அருகே உள்ள நெல்லூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் வைத்து விற்ற தெரியவந்தது.

    இதனால் அப்பகுதியை சேர்ந்த கார்த்திக் வயசு (26) மற்றும் கவுரிபுரத்தை சேர்ந்த குருமூர்த்தி வயது (48) பீர்ஜேபள்ளியை சேர்ந்த பிரபு வயது (34)ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×